search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 5,535 பேருக்கு கொரோனா தொற்று: 154 பேர் பலி

    மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று புதிதாக 5,535 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 154 பேர் உயிரிழந்துள்ளனர்.
    மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 5,535 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,63,055 ஆக அதிகரித்துள்ளது. இன்று 154 பேர் உயிரிழந்துள்ளதால், இதுவரை 46,356 பேர் பலியாகியுள்ளனர். 16,35,971 பேர் குணமடைந்துள்ள நிலையில், 79,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

    மும்பையின் இன்று புதிதாக 924 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,192 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் இதுவரை 10,624 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,49,903 குணமடைந்துள்ளனர். மும்பையில் இதுவரை 2,72,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×