என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எங்கள் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி: எடியூரப்பா
Byமாலை மலர்11 Nov 2020 3:33 AM GMT (Updated: 11 Nov 2020 3:33 AM GMT)
இடைத்தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று இருப்பதன் மூலம் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கியுள்ளனர் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.
பெங்களூரு :
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா பெற்றது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடைபெற்ற ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. எங்கள் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வெற்றி மக்களை சேர்ந்தது. இந்த வெற்றி மூலம் மக்கள் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் உண்டானது. கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவி பெரிய சவால்களை சந்தித்தோம். இந்த நேரத்தில் மக்களின் கஷ்டங்களை தீர்க்க மாநில அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது.
தேர்தல் பிரசாரத்தின்போது, 2 தொகுதிகளில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றுவோம். இன்னும் உள்ள ஆட்சி காலத்தில் நாங்கள் ஏற்கனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். பீகாரில் பா.ஜனதா கூட்டணிக்கு நாங்கள் எதிர்பாராத வெற்றி கிடைத்துள்ளது. பிரதமர் மோடி, நிதிஷ்குமார் ஆகியோரின் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு இது எடுத்துக் காட்டு ஆகும்.
இதற்காக பிரதமர் மோடி, எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர்கள் எங்கள் ஆட்சியை பற்றி விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு மக்கள் தக்க பதில் அளித்துள்ளனர்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலில் பா.ஜனதா பெற்றது குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
இடைத்தேர்தல் நடைபெற்ற ஆர்.ஆர்.நகர், சிரா ஆகிய 2 தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. எங்கள் கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்த வெற்றி மக்களை சேர்ந்தது. இந்த வெற்றி மூலம் மக்கள் மாநில அரசின் செயல்பாடுகளுக்கு ஆதரவு வழங்கியுள்ளனர். கடந்த ஒரு ஆண்டில் வெள்ளம் ஏற்பட்டு பாதிப்புகள் உண்டானது. கொரோனா என்ற கொடிய வைரஸ் பரவி பெரிய சவால்களை சந்தித்தோம். இந்த நேரத்தில் மக்களின் கஷ்டங்களை தீர்க்க மாநில அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டது.
தேர்தல் பிரசாரத்தின்போது, 2 தொகுதிகளில் நாங்கள் அளித்த வாக்குறுதிகளை 100 சதவீதம் நிறைவேற்றுவோம். இன்னும் உள்ள ஆட்சி காலத்தில் நாங்கள் ஏற்கனவே மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவோம். பீகாரில் பா.ஜனதா கூட்டணிக்கு நாங்கள் எதிர்பாராத வெற்றி கிடைத்துள்ளது. பிரதமர் மோடி, நிதிஷ்குமார் ஆகியோரின் உழைப்புக்கு பலன் கிடைத்துள்ளது. மோடி மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதற்கு இது எடுத்துக் காட்டு ஆகும்.
இதற்காக பிரதமர் மோடி, எங்கள் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது எதிர்க்கட்சி தலைவர்கள் எங்கள் ஆட்சியை பற்றி விமர்சனம் செய்தனர். அவர்களுக்கு மக்கள் தக்க பதில் அளித்துள்ளனர்.
இவ்வாறு எடியூரப்பா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X