என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெலகாவி விவகாரம் குறித்து கர்நாடக கவர்னருடன், பகத்சிங் கோஷ்யாரி பேச சிவசேனா வலியுறுத்தல்
Byமாலை மலர்3 Nov 2020 1:38 AM GMT (Updated: 3 Nov 2020 1:38 AM GMT)
பெலகாவி வன்முறைகளுக்கு எதிராக மகாராஷ்டிரா கவர்னர், கர்நாடக கவர்னரிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
மும்பை :
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் அதிகளவில் மராட்டியர்கள் வசித்து வருகின்றனர். எனவே எல்லையில் உள்ள அந்த பகுதியை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என அங்கு வசிக்கும் மராத்தியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல மராட்டிய அரசும் பெலகாவி பம்பாய் மகாணத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்ததாக உரிமை கோரி வருகிறது.
தற்போது இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கர்நாடக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி சூரியனும், நிலவும் உள்ளவரை பெலகாவி, கர்நாடகத்தின் ஒரு அங்கமாகத் தான் இருக்கும் என கூறினார்.
இதையடுத்து பெலகாவியில் மராட்டியர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கர்நாடக கவர்னரிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் ‘சாம்னா’ பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 60 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிக்கும் மராட்டியர்கள், அவர்களின் மொழி, கலாசாரம் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெலகாவி பிரச்சினையை தவிர்த்து இருமாநிலங்களுக்கு இடையேயும் மகிழ்ச்சி நிறைந்த பலமான சமூக, கலாசார, வியாபார உறவு நீடித்து வருகிறது. ஆனால் கர்நாடக அரசு மராத்தி பேசும் 20 லட்சம் மக்களை கடுமையாக நடத்தி வருவது அங்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த வன்முறைகளுக்கு எதிராக மராட்டிய கவர்னர், கர்நாடக கவர்னரிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும். அல்லது பெலகாவி பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்திக்க அவர் அனுமதி பெற்று தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டத்தில் அதிகளவில் மராட்டியர்கள் வசித்து வருகின்றனர். எனவே எல்லையில் உள்ள அந்த பகுதியை மராட்டியத்துடன் இணைக்க வேண்டும் என அங்கு வசிக்கும் மராத்தியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதேபோல மராட்டிய அரசும் பெலகாவி பம்பாய் மகாணத்திற்கு உட்பட்ட பகுதியாக இருந்ததாக உரிமை கோரி வருகிறது.
தற்போது இந்த பிரச்சினை தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இதற்கிடையே கர்நாடக துணை முதல்-மந்திரி லட்சுமண் சவதி சூரியனும், நிலவும் உள்ளவரை பெலகாவி, கர்நாடகத்தின் ஒரு அங்கமாகத் தான் இருக்கும் என கூறினார்.
இதையடுத்து பெலகாவியில் மராட்டியர்களுக்கு எதிரான வன்முறையை தடுக்க கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி கர்நாடக கவர்னரிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என சிவசேனா வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து அந்த கட்சியின் ‘சாம்னா’ பத்திரிகையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 60 ஆண்டுகளாக கர்நாடகாவில் வசிக்கும் மராட்டியர்கள், அவர்களின் மொழி, கலாசாரம் மீது கொடூர தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. பெலகாவி பிரச்சினையை தவிர்த்து இருமாநிலங்களுக்கு இடையேயும் மகிழ்ச்சி நிறைந்த பலமான சமூக, கலாசார, வியாபார உறவு நீடித்து வருகிறது. ஆனால் கர்நாடக அரசு மராத்தி பேசும் 20 லட்சம் மக்களை கடுமையாக நடத்தி வருவது அங்கு கோபத்தை ஏற்படுத்துகிறது. இந்த வன்முறைகளுக்கு எதிராக மராட்டிய கவர்னர், கர்நாடக கவர்னரிடம் தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி பேச வேண்டும். அல்லது பெலகாவி பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்திக்க அவர் அனுமதி பெற்று தரவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X