search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    இந்தியாவில் 80,88,851 பேருக்கு கொரோனா பாதிப்பு

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 80,88,851ஆக உள்ளது. கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,090 ஆக உயர்ந்துள்ளது.
    புதுடெல்லி:

    மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இன்று காலை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 80,88,851 ஆக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 48,648 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 583 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,21,090 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 73.73 லட்சமாக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 57,386 பேர் குணமடைந்துள்ளனர்.

    நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 5.94 லட்சம் பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். உயிரிழப்பு 1.50 சதவீதமாக உள்ளது. குணமடையும் விகிதம் 91.15 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    மேலும் இந்தியாவில் ஒரே நாளில் 11.64 லட்சம் கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×