என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இடைநீக்கம் - மாயாவதி அதிரடி நடவடிக்கை
Byமாலை மலர்29 Oct 2020 10:35 PM GMT (Updated: 29 Oct 2020 10:35 PM GMT)
மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி ஓட்டுப்போட வாய்ப்புள்ளதாக கருதப்படும் தனது கட்சியை சேர்ந்த 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை மாயாவதி இடைநீக்கம் செய்தார்.
லக்னோ:
உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள 10 நாடாளுமன்ற மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தனர். அவர்கள், மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.
மேலும், அவர்களில் 4 எம்.எல்.ஏ.க்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் ராம்ஜி கவுதமின் வேட்புமனுவில் உள்ள தங்கள் கையெழுத்து, போலியானது என்று தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இருப்பினும், ராம்ஜி கவுதமின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அவர்கள் உள்பட 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று இடைநீக்கம் செய்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் வேறு கட்சியில் சேர்ந்தால், அவர்களுக்கு எதிராக கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
அத்துடன், சமாஜ்வாடி கட்சிக்கு எதிராகவும் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த மாநிலங்களவை தேர்தலில், சமாஜ்வாடி கட்சியின் 2-வது வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய எந்த கட்சி வேட்பாளருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்.
மேலும், வருங்காலத்தில் நடக்கும் சட்ட மேலவை, மாநிலங்களவை உள்பட எந்த தேர்தலாக இருந்தாலும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை வீழ்த்த பா.ஜனதா உள்பட எந்த கட்சிக்கும் வாக்களிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உத்தரபிரதேசத்தில் காலியாக உள்ள 10 நாடாளுமன்ற மாநிலங்களவை இடங்களுக்கு வருகிற 9-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கிடையே, பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.க்கள், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவை சந்தித்தனர். அவர்கள், மாநிலங்களவை தேர்தலில் கட்சி மாறி வாக்களிப்பார்கள் என்று தெரிகிறது.
மேலும், அவர்களில் 4 எம்.எல்.ஏ.க்கள், பகுஜன் சமாஜ் கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளர் ராம்ஜி கவுதமின் வேட்புமனுவில் உள்ள தங்கள் கையெழுத்து, போலியானது என்று தேர்தல் அதிகாரியிடம் மனு கொடுத்தனர். இருப்பினும், ராம்ஜி கவுதமின் வேட்புமனு ஏற்றுக்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில், அவர்கள் உள்பட 7 அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி நேற்று இடைநீக்கம் செய்தார்.
இதுபற்றி அவர் கூறுகையில், “இந்த எம்.எல்.ஏ.க்களை, கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைக்க வேண்டாம் என்று நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவர்கள் வேறு கட்சியில் சேர்ந்தால், அவர்களுக்கு எதிராக கட்சி தாவல் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்” என்றார்.
அத்துடன், சமாஜ்வாடி கட்சிக்கு எதிராகவும் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
இந்த மாநிலங்களவை தேர்தலில், சமாஜ்வாடி கட்சியின் 2-வது வேட்பாளரை தோற்கடிக்கக்கூடிய எந்த கட்சி வேட்பாளருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்.
மேலும், வருங்காலத்தில் நடக்கும் சட்ட மேலவை, மாநிலங்களவை உள்பட எந்த தேர்தலாக இருந்தாலும், சமாஜ்வாடி கட்சி வேட்பாளர்களை வீழ்த்த பா.ஜனதா உள்பட எந்த கட்சிக்கும் வாக்களிப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X