என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக பெண் நீதிபதி பணிநீக்கம்
Byமாலை மலர்29 Oct 2020 1:27 AM GMT (Updated: 29 Oct 2020 1:27 AM GMT)
உத்தரகாண்ட் மாநிலத்தில் வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்தியதாக சிவில் நீதிபதி தீபாலி சர்மா நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.
டேராடூன்:
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் தீபாலி சர்மா. ஹரித்துவாரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, 13 வயது சிறுமி, வீட்டு வேலை செய்து வந்தாள். அவளை பெண் நீதிபதி தீபாலி சர்மா சித்ரவதை செய்து வந்ததாக புகார் எழுந்தது.
அதுகுறித்து ஹரித்துவார் மாவட்ட நீதிபதி ராஜேந்திரசிங் அளித்த அறிக்கை அடிப்படையில், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், தீபாலி சர்மா வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
போலீசார் சோதனையிட்டபோது, உடலில் காயங்களுடன் இருந்த சிறுமி மீட்கப்பட்டாள். நீதிபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், நீதிபதி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரை பணிநீக்கம் செய்ய உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் முழு அமர்வு தீர்மானம் நிறைவேற்றியது. மாநில அரசு சிபாரிசின் பேரில், கவர்னரும் ஒப்புதல் அளித்ததால், சிவில் நீதிபதி தீபாலி சர்மா நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் சிவில் நீதிபதியாக பணியாற்றி வந்தவர் தீபாலி சர்மா. ஹரித்துவாரில் உள்ள அவரது வீட்டில் கடந்த 2015-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, 13 வயது சிறுமி, வீட்டு வேலை செய்து வந்தாள். அவளை பெண் நீதிபதி தீபாலி சர்மா சித்ரவதை செய்து வந்ததாக புகார் எழுந்தது.
அதுகுறித்து ஹரித்துவார் மாவட்ட நீதிபதி ராஜேந்திரசிங் அளித்த அறிக்கை அடிப்படையில், 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம், தீபாலி சர்மா வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரகாண்ட் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
போலீசார் சோதனையிட்டபோது, உடலில் காயங்களுடன் இருந்த சிறுமி மீட்கப்பட்டாள். நீதிபதி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதன்பேரில், நீதிபதி இடைநீக்கம் செய்யப்பட்டார். அவரை பணிநீக்கம் செய்ய உத்தரகாண்ட் ஐகோர்ட்டின் முழு அமர்வு தீர்மானம் நிறைவேற்றியது. மாநில அரசு சிபாரிசின் பேரில், கவர்னரும் ஒப்புதல் அளித்ததால், சிவில் நீதிபதி தீபாலி சர்மா நேற்று பணிநீக்கம் செய்யப்பட்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X