என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பயங்கரவாதம் தொடர்பான சவால்களை சமாளிக்க போலீஸ் படைகளை நவீனமயமாக்கி வருகிறோம் - அமித்ஷா பேச்சு
Byமாலை மலர்21 Oct 2020 9:37 PM GMT (Updated: 21 Oct 2020 9:37 PM GMT)
பயங்கரவாதம் குறித்த சவால்களை சமாளிக்க போலீஸ் படைகளை நவீனமயமாக்கி வருகிறோம் என்று அமித்ஷா கூறினார்.
புதுடெல்லி:
காவலர் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லி சாணக்கியபுரியில் உள்ள போலீஸ் நினைவுச்சின்னத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மத்திய ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை இயக்குனர் அரவிந்த் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், போலீஸ் மற்றும் மத்திய ஆயுதப்படையினரிடையே அமித்ஷா பேசினார். அவர் பேசியதாவது:-
போலீஸ் படைகளின் பணி, புதிய சவால்களை கண்டு வருகிறது. பயங்கரவாதம், இணைய குற்றங்கள், போதை கடத்தல், ஆள் கடத்தல், ஆயுத கடத்தல், கள்ள நோட்டு போன்ற குற்றங்களில், கடந்த 20, 30 ஆண்டுகளில் புதிய பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த புதிய பரிமாணங்களை சமாளிக்க போலீஸ் படைகளை தயார்படுத்துவது சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்காக போலீஸ் துறையை நவீனமயமாக்கும் விரிவான திட்டத்தை தயாரித்துள்ளோம்.
இனிவரும் நாட்களில், மேலே சொன்ன சவால்களை சமாளிக்கும் அளவுக்கு போலீஸ் படைகளை மோடி அரசு தயார்படுத்தும் என்று நம்புகிறேன்.
அத்துடன், நாட்டின் எல்லையை பலப்படுத்த தொழில்நுட்பங்களை புகுத்தி இருக்கிறோம். தொழில்நுட்பமும், படைகளின் செயல்திறனும் நமது எல்லைகளுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.
இதுவரை, 35 ஆயிரத்து 398 போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் பணியின்போது உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 264 பேர் இறந்தனர். கொரோனாவுக்கு 343 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
காவலர் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, டெல்லி சாணக்கியபுரியில் உள்ள போலீஸ் நினைவுச்சின்னத்தில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மத்திய ஆயுதப்படைகளின் அணிவகுப்பு மரியாதையையும் பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், மத்திய உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி, மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, உளவுத்துறை இயக்குனர் அரவிந்த் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர், போலீஸ் மற்றும் மத்திய ஆயுதப்படையினரிடையே அமித்ஷா பேசினார். அவர் பேசியதாவது:-
போலீஸ் படைகளின் பணி, புதிய சவால்களை கண்டு வருகிறது. பயங்கரவாதம், இணைய குற்றங்கள், போதை கடத்தல், ஆள் கடத்தல், ஆயுத கடத்தல், கள்ள நோட்டு போன்ற குற்றங்களில், கடந்த 20, 30 ஆண்டுகளில் புதிய பரிமாணங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்த புதிய பரிமாணங்களை சமாளிக்க போலீஸ் படைகளை தயார்படுத்துவது சவால் நிறைந்ததாக உள்ளது. இதற்காக போலீஸ் துறையை நவீனமயமாக்கும் விரிவான திட்டத்தை தயாரித்துள்ளோம்.
இனிவரும் நாட்களில், மேலே சொன்ன சவால்களை சமாளிக்கும் அளவுக்கு போலீஸ் படைகளை மோடி அரசு தயார்படுத்தும் என்று நம்புகிறேன்.
அத்துடன், நாட்டின் எல்லையை பலப்படுத்த தொழில்நுட்பங்களை புகுத்தி இருக்கிறோம். தொழில்நுட்பமும், படைகளின் செயல்திறனும் நமது எல்லைகளுக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்கும்.
இதுவரை, 35 ஆயிரத்து 398 போலீசார் மற்றும் மத்திய ஆயுதப்படையினர் பணியின்போது உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு மட்டும் 264 பேர் இறந்தனர். கொரோனாவுக்கு 343 வீரர்கள் பலியாகி உள்ளனர்.
இவ்வாறு அமித்ஷா பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X