என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர் பலனளிக்கவில்லை: ஐ.சி.எம்.ஆர்.
Byமாலை மலர்16 Oct 2020 3:20 PM GMT (Updated: 16 Oct 2020 3:20 PM GMT)
கொரோனா சிகிச்சைக்கு ரெம்டெசிவிர், லோபினாவிர் போன்ற மருந்துகள் பலனளிக்கவில்லை என்று ஐ.சி.எம்.ஆர். தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கும்போது தடுப்பூசி இல்லாததால் ரெம்டெசிவிர், ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற மருந்துகள் ஆபத்தான நிலையில் உள்ளவர்களை காப்பாற்ற பயன்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டது. இதனால் ஒவ்வொரு நாடுகள் அதிக அளவில் இறக்குமதி செய்தன.
நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு நாடுகளும் தங்களுடைய கருத்துக்களை மாற்றிக்கொண்டன. இந்தியாவும் ரெம்டெசிவிர் மருந்தை பயன்படுத்தியது.
இந்நிலையில் ரெம்டெசிவிர், ஹைட்ராக்சி குளோரோகுயின் போன்ற மருந்துகள் கொரோனா சிகிச்சைக்கு பலனளிக்கவில்லை என்று ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. மேலும் லோபினாவிர், ரிட்டோனாவிர் மருந்துகளும் பலனளிக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
இடைக்காலமாக பகுப்பாய்வு செய்ததில் பலனளிக்கவில்லை எனத் தெரியவந்துள்ளது. உலக சுகாதார அமைப்பின் கீழ் இணைந்து நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X