என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சித்தி விநாயகர் கோவிலுக்குள் நுழைய முயன்ற பாஜகவினர் கைது
Byமாலை மலர்14 Oct 2020 2:25 AM GMT (Updated: 14 Oct 2020 2:25 AM GMT)
மும்பையில் சித்தி விநாயகர் கோவிலுக்குள் நுழைய முயன்ற பிரவின் தாரேகர், பிரசாத் லாட் உள்ளிட்ட 30 பா.ஜனதாவினரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
மும்பை :
மகாராஷ்டிராவில் கொரோனா பிரச்சினை காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நேற்று மாநில மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தரேகர் தலைமையில் பா.ஜனதாவினர் மும்பை பிரபா தேவி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோவில் முன் போடப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பை மீறி அதற்குள் நுழைய முயன்றனர்.
இதையடுத்து போலீசார் பிரவின் தாரேகர், பிரசாத் லாட் உள்ளிட்ட 30 பா.ஜனதாவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்தநிலையில் போராட்டம் குறித்து பிரவின் தாரேகர் கூறுகையில், “வீட்டுக்கு டெலிவிரி செய்யும் வசதியுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மன அமைதிக்காக செல்லும் கோவில்களை திறப்பது பற்றி யார் யோசிக்க போகிறார்கள்?. அகங்காரத்தால் நிறைந்து உள்ள இந்த அரசு கோவில்களை நம்பியே வாழும் சிறு வியாபாரிகளை பற்றி நினைக்கவில்லை” என்றார்.
மகாராஷ்டிராவில் கொரோனா பிரச்சினை காரணமாக வழிபாட்டு தலங்கள் மூடப்பட்டுள்ளன. எனவே வழிபாட்டு தலங்களை திறக்க வலியுறுத்தி பா.ஜனதாவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதில் நேற்று மாநில மேல்-சபை எதிர்க்கட்சி தலைவர் பிரவின் தரேகர் தலைமையில் பா.ஜனதாவினர் மும்பை பிரபா தேவி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோவில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அவர்கள் கோவில் முன் போடப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பை மீறி அதற்குள் நுழைய முயன்றனர்.
இதையடுத்து போலீசார் பிரவின் தாரேகர், பிரசாத் லாட் உள்ளிட்ட 30 பா.ஜனதாவினரை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இந்தநிலையில் போராட்டம் குறித்து பிரவின் தாரேகர் கூறுகையில், “வீட்டுக்கு டெலிவிரி செய்யும் வசதியுடன் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் மன அமைதிக்காக செல்லும் கோவில்களை திறப்பது பற்றி யார் யோசிக்க போகிறார்கள்?. அகங்காரத்தால் நிறைந்து உள்ள இந்த அரசு கோவில்களை நம்பியே வாழும் சிறு வியாபாரிகளை பற்றி நினைக்கவில்லை” என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X