search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    ஐதராபாத்தில் கட்டிடத்தில் இருந்து குதித்து ஐ.எப்.எஸ். அதிகாரி தற்கொலை

    ஆந்திர மாநில வனத்துறை ஐ.எப்.எஸ். அதிகாரி குடியிருப்பு கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஐதராபாத்:

    ஆந்திர மாநில வனத்துறையில் ஐ.எப்.எஸ். அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் ரமணா மூர்த்தி (வயது59). இவர் ஐதராபாத் நகோலே பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

    இந்த நிலையில், நேற்று அதிகாலை திடீரென அந்த கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது இந்த விபரீத முடிவுக்கான காரணம் தெரியவில்லை. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
    Next Story
    ×