என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சிவில் சர்வீசஸ் தேர்வுகளை ஒத்திவைக்க முடியாது- மனுக்களை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்
Byமாலை மலர்30 Sep 2020 7:51 AM GMT (Updated: 30 Sep 2020 7:51 AM GMT)
சிவில் சர்வீசஸ் தேர்வை ஒத்திவைக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கடந்த மே மாதம் 31ம் தேதி நடைபெறுவதாக இருந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு, கொரோனா பரவல் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. அதன்பின்னர் திருத்தப்பட்ட தேர்வு அட்டவணையை ஜூன் 5ம் தேதி மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டது. அதில், அக்டோபர் 4ம் தேதி கொரோனா கால வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த தேர்வை நாடு முழுவதும் உள்ள 72 நகரங்களில் சுமார் 6 லட்சம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் தேர்வை மேலும் தள்ளி வைக்கக்கோரி, தேர்வர்கள் 20 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுவிட்டதால், இனி தேர்வை தள்ளி வைப்பதற்கு சாத்தியம் இல்லை என யுபிஎஸ்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்யும்படி யுபிஎஸ்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதன்படி யுபிஎஸ்சி நேற்று நேற்று பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. அதில், தேர்வை ஒத்தி வைக்க முடியாது என்று யுபிஎஸ்சி பதில் அளித்தது. மேலும் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் ஏற்கனவே செய்யப்பட்டுள்ளதாக விளக்கமும் அளித்தது. நீட். ஜே.இ.இ தேர்வுகளுக்கு அனுமதி அளித்ததை போல சிவில் சர்வீஸ் தேர்வுக்கும் அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.
இந்நிலையில் இவ்வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, யுபிஎஸ்சி அளித்த விளக்கத்தை ஏற்ற நீதிபதிகள், நீட் தேர்வை மேலும் ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
அதேசமயம், கடைசி வாய்ப்பில் தேர்வு எழுதுவோருக்கு சலுகைகளை வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X