என் மலர்
நீங்கள் தேடியது "Civil Services Exam"
- கருத்தரங்கு 'வாகை சூட வா' என்ற தலைப்பில் நடைபெற்றது.
- குடிமைப் பணித் தேர்வு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு.
எஸ்.ஏ. கலை மற்றும் அறிவியல் கல்லூரி மற்றும் கிங்மேக்கர் ஐஏஎஸ் அகாடமியுடன் இணைந்து குடிமைப் பணித் தேர்வு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு 'வாகை சூட வா' என்ற தலைப்பில் நடைபெற்றது.
கருத்தரங்கில் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயாராவதற்கான நுண்ணறிவுகள் மற்றும் உத்திகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப் ஐ.ஏ.எஸ்., ஆவடி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால் ஐ.பி.எஸ்., கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான எம். பூமிநாதன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கருத்தரங்கம் தமிழ்த்தாய் வாழ்த்து மற்றும் பாரம்பரிய விளக்கு ஏற்றுதலுடன் தொடங்கியது. கல்லூரி இயக்குநர் முனைவர் வி. சாய் சத்யவதி வரவேற்புரை வழங்கினார். கல்லூரித் தாளாளர் ப. வெங்கடேஷ் ராஜா, அர்ப்பணிப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட தேர்வுத் தயாரிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, தலைமை உரையை நிகழ்த்தினார்.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் எம். பிரதாப், ஐ.ஏ.எஸ்., பொது நிர்வாகம் மற்றும் நிர்வாகத்தில் தனது அனுபவங்களைப் பகிர்ந்தார்.
ஆவடி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் அய்மன் ஜமால், ஐ.பி.எஸ்., தலைமைத்துவம் மற்றும் சிவில் சேவைகளில் சட்ட அமலாக்கத்தின் முக்கியப் பங்கு குறித்து பேசி ஊக்கப்படுத்தினார்.
கிங் மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர் மற்றும் இயக்குநரான எம். பூமிநாதன், வெற்றிக்கான நடைமுறை உத்திகளைக் கொண்டு மாணவர்களைக் குடிமைப் பணித் தேர்வுக்குத் தயார்ப்படுத்தும் ஒரு ஊடாடும் கேள்வி பதில் அமர்வை நடத்தினார்.
நிகழ்ச்சியின் நிறைவாக நாட்டுப்பண் இசைக்கப்பட்டு, கருத்தரங்கம் நிறைவு பெற்றது. பங்கேற்பாளர்கள் குடிமைப் பணித் தேர்வின் சவால்களை எதிர்கொள்ள ஒரு மிகச் சிறப்பான முன்னெடுப்பை இந்நிகழ்ச்சி வழங்கியது.
- 24 மையங்களில் நடந்தது.
- பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
கோவை,
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் குடிமை பணிக்கான முதல் நிலை தேர்வு இன்று (ஞாயிற்றுக்கி ழமை) நடைபெற்றது.
கோவை மாவட்டத்தில் 24 மையங்களில் நடந்த தேர்வை 9 ஆயிரத்து 447 பேர் எழுதினர். தேர்வை கண்காணிக்கும் பணியில் கலெக்டர் சமீரன் தலைமையில் 8 சப்-கலெக்டர்கள், 24 தாசில்தார்கள், 40 துணை தாசில்தார்கள், 414 அறை கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டனர்.
தேர்வை பார்வையிட மத்திய அரசு பணியாளர் தேர் வாணையம் மூலம் ஐ.ஏ.எஸ். அதிகாரி சிவ சண்முகராஜா,டாக்டர் வள்ளலார் ஆகி யோர் சிறப்பு பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டு இருந்தனர்.
தேர்வு எழுத வந்தவர்கள் காலை 8.30 மணிக்குள்ளும், மதியம் நடைெபறும் தேர்வுக்கு பிற்பகல் 1.30 மணிக்குள்ளும் மையங்களுக்கு வந்தனர். அதன் பின்னர் வந்தவர்கள் அனுமதிக்கப்பட வில்லை.
தேர்வு வளாகத்துக்குள் செல்போன், டிஜிட்டல் கைக் கடிகாரம் உள்ளிட்டவைகளை எடுத்து வர அனுமதி க்கப்படவில்லை. கருப்பு மை பந்து முனை பேனா மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டனர்.
இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்த புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டைகள், ஆதார், ஓட்டுனர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு, பாஸ்போர்ட் ஆகியவற்றில் ஏதாவது ஒன்று மற்றும் பாஸ் போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை எடுத்து வர அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
தேர்வு மைய வளாகத்துக்குள் கொரோனா தொடர்பான அரசு வழிகாட்டு நெறி முறைகளின்படி முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை தேர்வு எழுதுபவர்கள் கடைபிடித்தனர்.
தேர்வு மையங்களில் செல்போன் ஜாமர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு இருந்தது.தேர்வு மையங்களுக்கு உக்டம், சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர், பொள்ளாச்சி போன்ற பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
கடந்த ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள், இம்மாதம் 5-ந் தேதி வெளியிடப்பட்டன. அதில், சத்தீஷ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்டு ஆதிக்கம் மிகுந்த தண்டேவாடா மாவட்டம் கீடம் நகரைச் சேர்ந்த நம்ரதா ஜெயின் (வயது 25) என்ற இளம்பெண், தேசிய அளவில் 12-வது ‘ரேங்க்’ பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர், தண்டேவாடாவில் பள்ளிக்கல்வியை முடித்து விட்டு, பிலாயில் என்ஜினீயரிங் படித்தவர். இவருடைய தந்தை உள்ளூர் வியாபாரி ஆவார். தாயார் குடும்பத்தலைவி. சகோதரர் ஆடிட்டருக்கு படித்து வருகிறார்.

ஆனால், தற்போது தனக்கு ஐ.ஏ.எஸ். ஒதுக்கீடு செய்யப்படும் என்று நம்ரதா எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார். மாவோயிஸ்டுகளால் பாதிக்கப்பட்ட சத்தீஷ்கார் மக்களுக்கு சேவை செய்ய விரும்புவதாக அவர் கூறினார். #CivilServicesExam #Maoisthit #NamrataJain






