search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    பெற்றோர் எதிர்ப்பால் போலீஸ் பாதுகாப்பு கோரும் லெஸ்பியன் ஜோடி

    உத்தரபிரதேசத்தில் பெற்றோர் எதிர்ப்பால் ஒருவரையொருவர் பிரிய மனமில்லாத லெஸ்பியன் ஜோடி போலீஸ் பாதுகாப்பு கோரி உள்ளூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகி உள்ளனர்.
    லக்னோ:

    உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தை சேர்ந்த 22 மற்றும் 23 பெண்கள் இருவருக்கு இடையே காதல் மலர்ந்தது.

    நானின்றி நீயில்லை, நீயின்றி நானில்லை என்கிற அளவில் இருவரும் தங்களது லெஸ்பியன் காதலை பலப்படுத்தி கொண்டனர்.

    இருவரும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர். இந்த நிலையில், இந்த லெஸ்பியன் காதல் விவகாரம் இருவரது பெற்றோருக்கும் தெரியவரவே சிக்கல் உண்டானது. அவர்களது காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து மிரட்டி உள்ளனர்.

    ஆனால் ஒருவரையொருவர் பிரிய மனமில்லாத அந்த காதல் ஜோடி இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். மேலும் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கோரி உள்ளூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டை அணுகி உள்ளனர்.
    Next Story
    ×