search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பினராயி விஜயன்
    X
    பினராயி விஜயன்

    கேரளாவில் இன்று மேலும் 6,324 பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் இன்று ஒரே நாளில் 6,324 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 21 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கொரோனா வைரஸ் தொடர்பான இன்றைய விவரத்தை அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.

    கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

    மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 6,324 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் 45,919 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
     
    கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3,168 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

    வைரஸ் தாக்குதலுக்கு இன்று ஒரே நாளில் 21 உயிரிழந்துள்ளனர். இதனால் கேரளாவில் கொரோனா தாக்குதலுக்கு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 613 ஆக அதிகரித்துள்ளது.

    Next Story
    ×