என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் மசோதாக்கள் விவசாயிகளுக்கு மரண சாசனம்: சித்தராமையா
Byமாலை மலர்22 Sep 2020 2:36 AM GMT (Updated: 22 Sep 2020 2:36 AM GMT)
வேளாண்மை சந்தைகள் மசோதா விவசாயிகளுக்கு மரண சாசனம் என்றும், இந்த சட்ட திருத்த மசோதாவில் அடங்கியுள்ள சதியை கர்நாடக சட்டசபையில் நாங்கள் விவரமாக எடுத்து வைப்போம் என்றும் சித்தராமையா கூறியுள்ளார்.
பெங்களூரு :
கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியை பயன்படுத்தி வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு வலுக்கட்டாயமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இது விவசாயிகளுக்கு மரண சாசனம். நமது நாட்டின் ஒரே நம்பிக்கை விவசாயம். அதற்கும் மத்திய அரசு இறுதி முடிவுக்கட்டி இருப்பது வேதனையானது.
விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை சபை ஆய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. இதை மத்திய அரசு ஏற்க மறுப்பது ஏன்?. விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள். அவர்களால் அரசின் உதவி இன்றி வேளாண்மை சந்தைகளை நிர்வகிக்க முடியாது. ஆனால் வேளாண்மை சந்தைகளை நாசப்படுத்துவது என்பது, ஒட்டுமொத்த விவசாயத்துறையையே நாசப்படுத்துவதற்கு சமம்.
அதாவது வேளாண்மை சந்தைகளின் கட்டுப்பாடுகள் இல்லாமல் தனியார் நிறுவனங்கள் சுதந்திரமாக விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதிப்பது தான் இந்த மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாவின் நோக்கம். நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் செயல் ஆகும். வேளாண்மை சந்தைகள் இனி தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். இது மத்திய பா.ஜனதா அரசின் விவசாயிகளுக்கு எதிரான சதி.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆதரவு விலை அம்சம் அந்த மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனாதைகளாக ஆகிவிடுவார்கள். வேளாண்மை சந்தைகளில் வியாபாரிகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. வரி வசூலிக்க முடியாது. தனியார் நிறுவனங்கள் தங்களின் இஷ்டம் போல் செயல்படலாம். இதற்கு தான் மத்திய அரசின் வேளாண்மை சந்தைகள் திருத்த மசோதா வழி வகுக்கிறது. முறைகேடான வழியில் விளைபொருட்களை பதுக்க முன்பு இருந்த சட்டம் தடை விதித்திருந்தது. அந்த அம்சத்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் விளைபொருட்களை பதுக்கி அவற்றின் விலையை செயற்கையான வழியில் உயர்த்த முயற்சி செய்யும்.
வேளாண்மை சந்தைகள் திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த மசோதா விவசாயிகளுக்கு உதவும் என்றால் அதுபற்றி விவசாயிகள், வேளாண்மை சந்தை நிர்வாகிகள், வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. இந்த சட்ட திருத்த மசோதாவில் அடங்கியுள்ள சதியை கர்நாடக சட்டசபையில் நாங்கள் விவரமாக எடுத்து வைப்போம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
கர்நாடக எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை மத்திய அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை. மக்கள் அச்சத்துடன் வாழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இந்த நெருக்கடியை பயன்படுத்தி வேளாண்மை சந்தைகள் சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு வலுக்கட்டாயமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ளது. இது விவசாயிகளுக்கு மரண சாசனம். நமது நாட்டின் ஒரே நம்பிக்கை விவசாயம். அதற்கும் மத்திய அரசு இறுதி முடிவுக்கட்டி இருப்பது வேதனையானது.
விவசாயம் தொடர்பான 3 மசோதாக்களை சபை ஆய்வு குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோருகின்றன. இதை மத்திய அரசு ஏற்க மறுப்பது ஏன்?. விவசாயிகளில் 80 சதவீதம் பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள். அவர்களால் அரசின் உதவி இன்றி வேளாண்மை சந்தைகளை நிர்வகிக்க முடியாது. ஆனால் வேளாண்மை சந்தைகளை நாசப்படுத்துவது என்பது, ஒட்டுமொத்த விவசாயத்துறையையே நாசப்படுத்துவதற்கு சமம்.
அதாவது வேளாண்மை சந்தைகளின் கட்டுப்பாடுகள் இல்லாமல் தனியார் நிறுவனங்கள் சுதந்திரமாக விவசாய பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதிப்பது தான் இந்த மத்திய அரசின் சட்ட திருத்த மசோதாவின் நோக்கம். நமது நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகளின் முதுகெலும்பை உடைக்கும் செயல் ஆகும். வேளாண்மை சந்தைகள் இனி தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டிற்கு சென்றுவிடும். இதனால் பெரும் பாதிப்பை சந்திக்கும் நிலை ஏற்படும் என்பதை விவசாயிகள் புரிந்துகொள்ள வேண்டும். இது மத்திய பா.ஜனதா அரசின் விவசாயிகளுக்கு எதிரான சதி.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆதரவு விலை அம்சம் அந்த மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அனாதைகளாக ஆகிவிடுவார்கள். வேளாண்மை சந்தைகளில் வியாபாரிகளை யாரும் கட்டுப்படுத்த முடியாது. வரி வசூலிக்க முடியாது. தனியார் நிறுவனங்கள் தங்களின் இஷ்டம் போல் செயல்படலாம். இதற்கு தான் மத்திய அரசின் வேளாண்மை சந்தைகள் திருத்த மசோதா வழி வகுக்கிறது. முறைகேடான வழியில் விளைபொருட்களை பதுக்க முன்பு இருந்த சட்டம் தடை விதித்திருந்தது. அந்த அம்சத்தை மத்திய அரசு நீக்கியுள்ளது. இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் விளைபொருட்களை பதுக்கி அவற்றின் விலையை செயற்கையான வழியில் உயர்த்த முயற்சி செய்யும்.
வேளாண்மை சந்தைகள் திருத்த மசோதா ஜனநாயகத்திற்கு எதிரானது. இந்த மசோதா விவசாயிகளுக்கு உதவும் என்றால் அதுபற்றி விவசாயிகள், வேளாண்மை சந்தை நிர்வாகிகள், வியாபாரிகளுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால் அதை மத்திய அரசு செய்யவில்லை. இந்த சட்ட திருத்த மசோதாவில் அடங்கியுள்ள சதியை கர்நாடக சட்டசபையில் நாங்கள் விவரமாக எடுத்து வைப்போம்.
இவ்வாறு சித்தராமையா கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X