என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாகிஸ்தானின் அத்துமீறிய தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் பலி
Byமாலை மலர்19 Sep 2020 6:26 PM GMT (Updated: 19 Sep 2020 6:26 PM GMT)
பாகிஸ்தான் படையின் அத்துமீறிய தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் உயிரிழந்து உள்ளனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற மேலவையில் பாதுகாப்பு துறைக்கான இணை மந்திரி ஸ்ரீபத் நாயக் எழுத்துப்பூர்வ முறையில் அளித்துள்ள பதிலில், எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட எல்லை மீறிய துப்பாக்கி சூடு தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
எனினும், ஜம்முவில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து போர்நிறுத்த ஒப்பந்த விதிமீறலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டில் (மார்ச் 1 முதல் செப்டம்பர் 7 வரை) எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் போர்நிறுத்த ஒப்பந்தத்தினை மீறி தாக்குதல் நடத்திய 2,453 சம்பவங்கள் நடந்துள்ளன.
ஜம்முவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான சர்வதேச எல்லை பகுதியில் இந்த ஆண்டில் (மார்ச் 1 முதல் ஆகஸ்டு 7 வரை) 192 எல்லை மீறிய துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.
காஷ்மீரில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் புனிதத்தன்மையை பாகிஸ்தான் படையினர் காக்க வேண்டும் என தூதரக அளவில் இந்தியாவால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
பாராளுமன்ற மேலவையில் பாதுகாப்பு துறைக்கான இணை மந்திரி ஸ்ரீபத் நாயக் எழுத்துப்பூர்வ முறையில் அளித்துள்ள பதிலில், எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் பாகிஸ்தான் படையினரால் நடத்தப்பட்ட எல்லை மீறிய துப்பாக்கி சூடு தாக்குதலில் கடந்த 6 மாதங்களில் 10 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.
ஜம்முவில் உள்ள இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையேயான சர்வதேச எல்லை பகுதியில் இந்த ஆண்டில் (மார்ச் 1 முதல் ஆகஸ்டு 7 வரை) 192 எல்லை மீறிய துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடந்தேறியுள்ளன என அவர் தெரிவித்து உள்ளார்.
காஷ்மீரில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு மற்றும் சர்வதேச எல்லை பகுதியில் புனிதத்தன்மையை பாகிஸ்தான் படையினர் காக்க வேண்டும் என தூதரக அளவில் இந்தியாவால் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X