search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    மகாராஷ்டிராவில் 153 போலீசாருக்கு கொரோனா தொற்று

    மகாராஷ்டிராவில் மேலும் 153 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    மும்பை:

    நாட்டிலேயே கொரோனா தொற்று பாதிப்பு  மகாராஷ்டிராவில் தான் அதிக அளவு காணப்படுகிறது.  கொரோனா தொற்றுக்கு எதிராக களத்தில் முன்னின்று பணியாற்றும் காவல்துறையினரும் மகாராஷ்டிராவில் அதிக அளவில் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர்.

    இந்நிலையில், மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 153 போலீசாருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் மகாராஷ்டிரா காவல்துறையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20,954 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 5 போலீசார் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 ஆக உயர்ந்துள்ளது.

    மாநிலத்தில் இதுவரை 22,078 போலீசார் கொரோனா நோய்தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை 3,731 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×