என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்19 Sep 2020 3:36 AM GMT (Updated: 19 Sep 2020 3:36 AM GMT)
பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்ற மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. எம்.பி.க்களில் ஒருவரான வினய் சகஸ்ரபுட்டே, கட்சியின் தேசிய துணைத்தலைவராகவும் உள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை கொரோனா பரிசோதனை செய்து நெகட்டிவ் முடிவு வந்ததால் பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்றார். ஆனால் 16ம் தேதி இரவு அவருக்கு தலைவலியுடன் லேசான காய்ச்சல் ஏற்பட்டதால் மீண்டும் பரிசோதனை செய்ததில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதுபற்றி டுவிட்டரில் பதிவு செய்துள்ள அவர், ‘எனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் டாக்டர்களின் அறிவுரைப்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெறவும்’ என்று கூறி உள்ளார்.
கடந்த புதன்கிழமையன்று மத்திய மந்திரி நிதின் கட்காரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட கர்நாடக பாஜக எம்பி அசோக் கஸ்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X