search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)
    X
    தேடுதல் வேட்டையில் பாதுகாப்பு படையினர் (கோப்பு படம்)

    ஸ்ரீநகர் என்கவுண்டர்- 3 பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றது பாதுகாப்பு படை

    ஸ்ரீநகரில் இன்று பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து ஸ்ரீநகரின் பாட்டாமலூ பகுதியை போலீசார் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்தன.

    இந்த சண்டையில் 3 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர். தெடார்ந்து அங்கு தேடுதல் வேட்டை நடைபெறுகிறது.



    Next Story
    ×