search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்
    X
    மேற்கு வங்க பாஜக தலைவர் திலிப் கோஷ்

    முதுகெலும்பு இல்லாத போலீஸ் அதிகாரிகள்- மேற்கு வங்க பாஜக தலைவர் கடும் தாக்கு

    மேற்கு வங்கத்தில் அரசுக்கு ஆதரவாக செயல்படும் போலீஸ் அதிகாரிகளுக்கு முதுகெலும்பு இல்லை என்று மாநில பாஜக தலைவர் விமர்சித்துள்ளார்.
    கொல்கத்தா:

    மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் கமர்ஹாதி நகரில் பாஜக சார்பில் சாய் பி சார்ச்சா (தேநீர் அருந்தியபடி உரையாடல்) நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாஜக மாநில தலைவர் திலிப் கோஷ் பங்கேற்று தொண்டர்களுடன் உரையாடினார்.

    அப்போது பேசிய அவர், மேற்கு வங்க அரசையும், ஆளும் திரிணாமுல் காங்கிரசையும் கடுமையாக விமர்சித்தார். போலீசார் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள்போன்று நடந்துகொள்வதாக குற்றம்சாட்டிய அவர், போலீஸ் அதிகாரிகளுக்கு முதுகெலும்பு இல்லை என்று விமர்சித்தார்.

    இப்படி அரசுக்கு ஆதரவாக செயல்படுவதை விட பேசாமல் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு காய்கறி வியாபாரம் செய்யலாம் என்றும் அவர் காட்டமாக கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சமூக இடைவெளி பின்பற்றப்படாமல், தொண்டர்கள் மிகவும் நெருக்கமாக நின்றது விமர்சனத்திற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×