search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நடிகர் பவன்கல்யாண்
    X
    நடிகர் பவன்கல்யாண்

    நடிகர் பவன்கல்யாண் வாழ்த்து பேனர் வைத்த 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலி

    நடிகர் பவன்கல்யாண் பிறந்தநாளையொட்டி வாழ்த்து பேனர் கட்ட முயன்ற 3 ரசிகர்கள் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
    ஸ்ரீகாளஹஸ்தி:

    ஆந்திராவில் ஜனசேனா கட்சி தலைவரும், பிரபல நடிகருமான பவன்கல்யாண் பிறந்தநாள் விழாவை நேற்று ரசிகர்கள் கொண்டாடினர். இதையொட்டி நேற்றுமுன்தினம் அங்குள்ள கதிரிஓபனப்பள்ளி வளைவு பகுதியில் ரசிகர்கள் பலர் 30 அடி உயரத்தில் வாழ்த்து பேனரை ஒரு மின் கம்பம் அருகில் கட்ட முயன்றனர். அப்போது மின்சாரம் தாக்கி அப்பகுதியை சேர்ந்த ராஜேந்திரா (வயது 23), சோமசேகர் (22), அருணாச்சலம் (24) ஆகியோர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களை காப்பாற்ற முயன்ற 4 வாலிபர்கள் படுகாயம் அடைந்தனர்.

    நடிகர் பவன்கல்யாண் பிறந்தநாளையொட்டி வாழ்த்து பேனர் கட்ட முயன்ற போது நிகழ்ந்த இந்த துயர சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. இதற்கு இரங்கல் தெரிவித்துள்ள நடிகர் பவன்கல்யாண், பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார்.
    Next Story
    ×