search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விவசாயி தற்கொலை
    X
    விவசாயி தற்கொலை

    இரட்டைக் குழந்தை இறந்த நிலையில் கொரோனா: மருத்துவமனையில் இருந்து குதித்து விவசாயி தற்கொலை

    இரட்டைக் குழந்தை இறந்த சோகத்தில் இருந் விவசாயிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் விரக்தியில் மருத்துவமனையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
    ஆந்திர பிரதேசம் கோதாவரி மாவட்டம் எலுரு பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் அங்குள்ள ஆசிரமம் கொரோனா சிகிச்சை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நேற்று இவர் திடீரென மனஅழுத்தம் காரணமாக மருத்துவமனை கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இவருக்கு இரட்டை குழந்தைகள் இருந்துள்ளது. கடந்த வாரம் இரண்டு குழந்தைகளும் இறந்துள்ளன. இந்த சோகத்தில் இருந்த அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது, மன அழுத்தம் ஏற்பட்ட தற்கொலை செய்து கொண்டார்.

    ஆந்திர மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மனஆழுத்தம் காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுவரை மூன்று டஜனுக்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×