என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜேஇஇ, நீட் தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் - ரமேஷ் பொக்ரியால்
Byமாலை மலர்27 Aug 2020 11:25 AM GMT (Updated: 27 Aug 2020 11:25 AM GMT)
ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
கொரோனா பரவலை கருத்தில் கொண்டும், மாணவர்களின் நலனை முன்னிறுத்தியும் ஜே இ இ மற்றும் நீட் தேர்வுகளை ரத்து செய்யவேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
ஆனாலும், திட்டமிட்டதேதிகளில் ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்நிலையில், ஜேஇஇ மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பம் என மத்திய கல்வி மந்திரி ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 24 மணி நேரத்தில் ஜே.இ.இ. தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 8.5 லட்சம் மாணவர்களில் 7.5 லட்சம் பேர் தேர்வுக்கான அனுமதி சீட்டை பதிவிறக்க்கம் செய்துள்ளனர்.
இதேபோல், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த 15 லட்சம் மாணவர்களில் 10 லட்சம் பேர் அனுமதி சீட்டை பதிவிறக்கம் செய்துள்ளனர். இது எதைக் காட்டுகிறதென்றால், ஜே.இ.இ. மற்றும் நீட் உள்ளிட்ட தேர்வுகளை நடத்த வேண்டும் என்பதே மாணவர்களின் விருப்பமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X