search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மத்திய உள்துறை அமைச்சகம்
    X
    மத்திய உள்துறை அமைச்சகம்

    மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம் - உள்துறை அமைச்சகம்

    மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தை தடை செய்ய வேண்டாம் என மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் அனுப்பியுள்ளது.
    புதுடெல்லி:
     
    மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநில தலைமை செயலாளர்களுக்கும் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது: 

    மாநிலங்களுக்கிடையிலான போக்குவரத்துக்கு தடை வேண்டாம். மாநிலங்களுக்குள்ளும், மாநிலங்களுக்கு வெளியேயும் செல்ல இ பாஸ் தேவையில்லை.

    மாநில அரசுகளின் செயல்பாடுகளினால் சரக்கு போக்குவரத்து தடை ஏற்படுகிறது. இதனால் வேலைவாய்ப்பு தடைபட்டு பொருளாதாரம் பாதிக்கப்படுகிறது.

    மேலும், மாநில அரசின் கட்டுப்பாடுகள் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு முரணானது என அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
    Next Story
    ×