என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சூரத் டாக்டரின் வித்தியாசமான கலை முயற்சி- உலர் பழங்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையார்
Byமாலை மலர்22 Aug 2020 7:34 AM GMT (Updated: 22 Aug 2020 7:34 AM GMT)
சூரத் நகரைச் சேர்ந்த டாக்டர் ஒருவர் உலர் பழங்களை பயன்படுத்தி அழகிய பிள்ளையார் உருவத்தைச் செய்து வியப்பில் ஆழ்த்தி உள்ளார்.
சூரத்:
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் பெருமளவில் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடமாநில கோவில்களில் பக்தர்கள் இன்றி தீப ஆராதனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பிள்ளையார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சூரத் டாக்டரின் வித்தியாசமான முறையில் உலர் பழங்களால் உருவாக்கிய பிள்ளையார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத இந்த பிள்ளையார் சிலை 20 அங்குலம் உயரம் உடையது. டாக்டர் அதிதி மிட்டல், அந்த உலர் பழங்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை மருத்துவமனையில் வைத்திருக்கிறார். இந்த பிள்ளையாரில் உள்ள உலர் பழங்கள் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி, பைன் விதைகள் உள்ளிட்ட உலர் பருப்புகளுடன் காட்சியளிக்கும் இந்தப் பிள்ளையாரை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருவிழா சிறப்புடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நாட்டில் கொரோனா பரவலால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், பக்தர்கள் பெருமளவில் தங்களது வீடுகளிலேயே பாதுகாப்புடன் விநாயகர் சதுர்த்தியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வடமாநில கோவில்களில் பக்தர்கள் இன்றி தீப ஆராதனையுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.
இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக கடும் கட்டுப்பாடுகளுடன் விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத பிள்ளையார்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சூரத் டாக்டரின் வித்தியாசமான முறையில் உலர் பழங்களால் உருவாக்கிய பிள்ளையார் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சுற்றுச்சூழலுக்கு ஆபத்தில்லாத இந்த பிள்ளையார் சிலை 20 அங்குலம் உயரம் உடையது. டாக்டர் அதிதி மிட்டல், அந்த உலர் பழங்களால் உருவாக்கப்பட்ட பிள்ளையாரை மருத்துவமனையில் வைத்திருக்கிறார். இந்த பிள்ளையாரில் உள்ள உலர் பழங்கள் மருத்துவமனைக்கு வரும் மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நிலக்கடலை, பாதாம் பருப்பு, முந்திரி, பைன் விதைகள் உள்ளிட்ட உலர் பருப்புகளுடன் காட்சியளிக்கும் இந்தப் பிள்ளையாரை மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X