search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை மின் நிலைய தீ விபத்து
    X
    துணை மின் நிலைய தீ விபத்து

    கிரேட்டர் நொய்டா துணை மின் நிலையத்தில் பயங்கர தீ விபத்து

    கிரேட்டர் நொய்டாவில் உள்ள துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகின.
    நொய்டா:

    உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் நொய்டா பவர் கம்பெனி லிமிடெட் (என்.பி.சி.எல்) நிறுவனத்தின் துணை மின்நிலையம் உள்ளது. இங்கு இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பின்னர் மளமளவென தீ வேகமாக பரவியதால் ஊழியர்கள் அந்த வளாகத்தைவிட்டு வெளியேறினர். 

    இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான மின் உபகரணங்கள் கருகின.
    Next Story
    ×