என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெள்ளத்தில் மூழ்கிய சாலை... பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணியை டிராக்டரில் அழைத்துச் சென்ற போலீசார்
Byமாலை மலர்17 Aug 2020 3:18 AM GMT (Updated: 17 Aug 2020 3:18 AM GMT)
மழை வெள்ளத்தில் சாலை மூழ்கியதால், கர்ப்பிணியை டிராக்டரில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போலீசாரை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
ஐதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. வெள்ளப்பெருக்கால் பல்வேறு சாலைகளில் அரிப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மஞ்சேரியல் மாவட்டம் சென்னூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் உள்ள குளம் நிரம்பி, ஓடையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை மூழ்கி உள்ளது. இதனால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டு, கிராம மக்கள் வெளியில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒரு கர்ப்பிணி பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. பிரசவத்திற்காக சென்னூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால், சாலை மூழ்கியதால் அவர்களால் மருத்துவமனைக் செல்ல முடியவில்லை.
இதையடுத்து அந்த பெண்ணை போலீசார் ஒரு டிராக்டரில் ஏற்றி தண்ணீர் சூழ்ந்த சாலை வழியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். போலீசாரின் இந்த சேவையை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X