search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    தாராவியில் புதிதாக 9 பேருக்கு கொரோனா: 87 பேருக்கு சிகிச்சை

    மும்பை தாராவி பகுதியில் கொரோனா பரவல் குறைந்து உள்ளது. இந்தநிலையில் அங்கு புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 658 ஆக உயர்ந்து உள்ளது.
    மும்பை :

    மும்பை தாராவி பகுதியில் கொரோனா பரவல் குறைந்து உள்ளது. இந்தநிலையில் நேற்று அங்கு புதிதாக 9 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அங்கு பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 658 ஆக உயர்ந்து உள்ளது. எனினும் இதில் 2 ஆயிரத்து 312 பேர் குணமடைந்து விட்டனர். தற்போது 87 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதேபோல நேற்று தாதரில் 26 பேருக்கும், மாகிமில் 17 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டது. அந்த பகுதிகளில் இதுவரை முறையே 2,152 பேர், 1,967 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தாராவி, தாதர், மாகிமை உள்ளடக்கிய ஜி-வடக்கு வார்டு பகுதியில் 6 ஆயிரத்து 777 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×