என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பையில் விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு மும்பை- கொங்கன் இடையே சிறப்பு ரயில் இயக்கம்
Byமாலை மலர்14 Aug 2020 6:48 PM GMT (Updated: 14 Aug 2020 6:48 PM GMT)
மும்பையில் விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு மும்பை -கொங்கன் இடையே சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.
மும்பை:
மத்திய மற்றும் மேற்கு ரயில்வே வாரியம் வெளயிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விநாயகர் சதுர்த்தி விழா வரும் 22 ம் தேதி வருகிறது. இதனை முன்னிட்டு மும்பை - கொங்கன் இடையே சிறப்புகட்டணத்துடன் கூடிய சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
மேற்கு ரயில்வே வரும் 17 ம் தேதி முதல் 27 -ம் தேதி வரையில் மும்பை சென்ட்ரல்-சாவந்த்வாடி, பாந்த்ரா-சாவந்த்வாடி, பாத்ரா-குடால் ஆகிய வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்பட உள்ளது. மாநிலத்தின் கடற்கரையோர பகுதிகளுக்கு கணபதி சிறப்பு ரயில்களை இயக்க தயாராக இருந்த போதிலும் மாநில அரசு அனுமதி அளிக்கவில்லை என தெரிவித்து உள்ளது.
மேலும் மும்பை -சாவந்த்வாடி , லோக்மான்யதிலக் -குடால் , ரத்னகரி- சாவந்த்வாடி ஆகிய பகுதிகளுக்கு வரும் 15 ம் தேதி முதல் செப்.,5 ம் தேதி வரையில் சிறப்புரயில்கள் இயக்கப்படுகிறது. பயணத்தின் போது பயணிகள் அனைவரும் கோவிட் 19 விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை (15 ம் தேதி) முதல் துவங்குகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X