search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அசாம் கனமழை
    X
    அசாம் கனமழை

    அசாம் மாநிலத்தில் கனமழைக்கு 110 பேர் பலி: 56,89,584 பேர் பாதிப்பு

    அசாம் மாநிலத்தில் இதுவரை கனமழைக்கு 110 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 56,89,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவத்துள்ளது.
    அசாம் மாநிலத்தில் கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்து வந்தது. எதிர்பார்த்ததைவிட அதிக கனமழை பெய்ததால் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானது. இதனால் மக்கள் தாழ்வான இடத்தில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    சாலைகள், பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. ஆடு, மாடுகள் போன்ற விலங்கினங்களும் வெள்ளத்தில் பலியாகின. சில இடங்கள் மழையால் தீவு போன்று தனித்து விடப்பட்டன.

    அசாம் கனமழை

    தற்போது அசாமில் மழை குறைய தொடங்கியுள்ளது. இந்நிலையில் அசாம் மாநிலத்தில் 30 மாவட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்டது. இதில் 110 பொதுமக்கள் உயிரிழந்ததாகவும், 56,89,584 பேர் பாதிக்கப்பட்டதாகவும் அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
    Next Story
    ×