search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் மந்திரி பினராயி விஜயன்
    X
    முதல் மந்திரி பினராயி விஜயன்

    கேரளாவில் மேலும் 1212 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கேரளாவில் மேலும் 1,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் மேலும் 1,212 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என அம்மாநில முதல் மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தில் ஒரே நாளில் 1,212 பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. 

    தற்போது 13,045 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனாவில் இருந்து 24,926 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் கொரோனாவுக்கு மேலும் 5 பேர் பலியான நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 126 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×