search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல்மந்திரி பினராயி விஜயன்
    X
    முதல்மந்திரி பினராயி விஜயன்

    கேரளாவில் மேலும் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு

    கேரளாவில் மேலும் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
    திருவனந்தபுரம்:

    கேரளா மாநிலத்தில் மேலும் 1,184 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்மந்திரி பினராயி விஜயன்  தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, முதல்மந்திரி பினராயி விஜயன் கூறுகையில், மாநிலத்தில் ஒரே நாளில் 1,184  பேருக்கு கொரோனா இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டது. கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 35,515 ஆக உயர்ந்துள்ளது.  கொரோனா தொற்றிலிருந்து இன்று 784 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.

    தற்போது 12,737 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கொரோனாவில் இருந்து 22,616 பேர் குணமடைந்துள்ளனர். கேரளாவில் இன்று 7 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்த நிலையில், எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×