என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கனமழை வெள்ளம்: கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை
Byமாலை மலர்10 Aug 2020 12:00 PM GMT (Updated: 10 Aug 2020 12:00 PM GMT)
தென்மேற்கு பருவமழைக்காலம் தீவிரமடைய உள்ள நிலையில் அது தொடர்பாக கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 6 மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்தினார்.
புதுடெல்லி:
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக பல்வேறு மாநிலங்களில் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா போன்ற மாநிலங்களில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த ஆண்டுக்கான தென்மேற்கு பருவமழை இன்னும் சில நாட்களில் தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தென்மேற்கு பருவமழையை கையாள்வது தொடர்பாகவும், தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு தொடர்பாகவும் 6 மாநில முதல்மந்திரிகளுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கேரளா, அசாம், பீகார், உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா ஆகிய 6 மாநில முதல்மந்திர்கள்
பங்கேற்றனர்.
பிரதமர்-முதல்மந்திரிகளுடனான இந்த கூட்டத்தில் பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷ் வர்தன் மற்றும் மாநில அதிகாரிகள் உள்பட பலர் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X