என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேஸ்புக்கில் நேரலை செய்து தற்கொலை செய்து கொண்ட வாலிபர்
Byமாலை மலர்7 Aug 2020 2:58 PM GMT (Updated: 7 Aug 2020 5:02 PM GMT)
மகாராஷ்டிராவில் 22 வயது வாலிபர் ஒருவர் பேஸ்புக்கில் நேரலை செய்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் பல்கார் மாவட்டத்தின் ஜவார் நகரத்தில் உள்ள வாடா தாலுகாவைச் சேர்ந்த நவ்நாத் பாங்கே ஓட்டல் ஒன்றில் வேலைப்பார்த்து வந்துள்ளார். 22 வயதாகும் இவர் சக ஊழியர்களுடன் முதலாளி வீட்டில் தங்கி வந்துள்ளார்.
நேற்று வேலையின் இடைவெளியின்போது தனது அறைக்கு வந்து உள்பக்கமாக பூட்டிக்கொண்டு, பேஸ்புக் செயலியை திறந்து லைவ்-ஸ்ட்ரீம் ஆன் செய்துள்ளார். பின்னர் அங்கிருந்து போனில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலைக்கான வேலைகளை செய்து கொண்டிருக்கும்போது அவரது சக நண்பர்கள் தற்கொலை செய்து விடாதே என்று கெஞ்சிய நிலையிலும் நவ்நாத் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை. தற்கொலை குறித்து நவ்நாத் கடிதம் ஏதும் எழுதி வைக்கவில்லை. போலீசார் உடலை கைப்பற்றி தற்செயலான மரணம் என பதிவு செய்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X