search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    உத்தர பிரதேசம், ஆந்திரா, கர்நாடகா மாநில கொரோனா அப்டேட்ஸ்...

    உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று 4,586 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆந்திராவில் 10,328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தாலும், குணமடைவோர் விகிதமும் அதிகரித்தே காணப்படுவது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்ல.

    உத்தர பிரதேச மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 4,586 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1,08,974 ஆக உயர்ந்துள்ளது. இன்றைய உயிரிழப்பு 61.

    ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 10,328 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,96,789-ஆக உயர்ந்துள்ளது. இன்றைய உயிரிழப்பு 72.

    கர்நாடகாவில் இதுவரை இல்லாத அளவிற்கு 6,805 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த எண்ணிக்கை 1,58,254 ஆக அதிகரித்துள்ளது.  இன்றைய உயிரிழப்பு 93.
    Next Story
    ×