என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக மாநிலம் கல்புர்கியில் இன்று மதியம் முதல் 144 தடை உத்தரவு
Byமாலை மலர்4 Aug 2020 8:57 AM GMT (Updated: 4 Aug 2020 8:57 AM GMT)
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு, கர்நாடக மாநிலத்தின் கல்புர்கியில் இன்று மதியம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜை நாளை நடக்க உள்ளது. அதில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி கட்டுமானத்துக்கு அடிக்கல் நாட்டி வைக்கிறார். இந்த விழாவுக்கு 175 பிரமுகர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர் என ராம ஜென்மபூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
ராமர் கோவில் பூமி பூஜைக்காக நாடு முழுவதிலும் இருந்து சுமார் 2 ஆயிரம் ஆலயங்களின் புனித மண் மற்றும் 100 நதிகளின் புனித நீரும் அனுப்பிவைக்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், அயோத்தி ராமர் கோவில் பூமி பூஜையை முன்னிட்டு, கர்நாடக மாநிலத்தின் கல்புர்கியில் இன்று மதியம் முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கல்புர்கி நகர போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அயோத்தி ராமர் கோவிலில் நடைபெற உள்ள பூமி பூஜையை முன்னிட்டு, கல்புர்கியில் இன்று மதியம் 3 மணி முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த உத்தரவு ஆகஸ்டு 6ம் தேதி காலை 6 மணி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X