என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தொற்று காலத்தில் 43 சதவீத இந்தியர்கள் மன உளைச்சலால் தவிப்பு - ஆய்வில் அம்பலம்
Byமாலை மலர்29 July 2020 7:12 AM GMT (Updated: 29 July 2020 7:12 AM GMT)
கொரோனா தொற்று காலத்தில் 43 சதவீத இந்தியர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:
கொரோனா வைரஸ் தொற்று நோய், 5 மாதங்களுக்கு முன்னர் பரவத்தொடங்கியதால் இந்தியாவில் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இப்படி நீண்டதொரு ஊடரங்கு போடப்பட்டதால் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடலால் மக்கள் வேலை இழப்பு, வாழ்வாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர். இதையொட்டி ‘ஜி.ஓ.கியூ.ஐ.ஐ’ சுகாதார அமைப்பு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இதில் 43 சதவீத இந்தியர்கள் மன உளைச்சலால் தவிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர்களில் 26 சதவீதத்தினர் லேசான மன உளைச்சலாலும், 11 சதவீதத்தினர் மிதமான மனச்சோர்வாலும், 6 சதவீதம்பேர் தீவிரமான மன உளைச்சலாலும் தவிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
“மன உளைச்சல் அதிகரிக்கிறபோது அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும், தற்போது ஊரடங்கு மற்றும் வாழ்க்கை முறைகள் கடுமையாக மாறி வருகின்றன. இதனால் 43 சதவீத இந்தியர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை சமாளிக்கவும் அவர்கள் தற்போது கற்றுக்கொண்டு வருகின்றனர்” என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நோய், 5 மாதங்களுக்கு முன்னர் பரவத்தொடங்கியதால் இந்தியாவில் தொடர் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இல்லாத வகையில் இப்படி நீண்டதொரு ஊடரங்கு போடப்பட்டதால் தொழில், வர்த்தக நிறுவனங்கள் மூடலால் மக்கள் வேலை இழப்பு, வாழ்வாதார இழப்புக்கு ஆளாகி உள்ளனர். இதையொட்டி ‘ஜி.ஓ.கியூ.ஐ.ஐ’ சுகாதார அமைப்பு, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இதில் 43 சதவீத இந்தியர்கள் மன உளைச்சலால் தவிப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. அவர்களில் 26 சதவீதத்தினர் லேசான மன உளைச்சலாலும், 11 சதவீதத்தினர் மிதமான மனச்சோர்வாலும், 6 சதவீதம்பேர் தீவிரமான மன உளைச்சலாலும் தவிக்கின்றனர் என தெரிய வந்துள்ளது.
“மன உளைச்சல் அதிகரிக்கிறபோது அது மனச்சோர்வுக்கு வழிவகுக்கும், தற்போது ஊரடங்கு மற்றும் வாழ்க்கை முறைகள் கடுமையாக மாறி வருகின்றன. இதனால் 43 சதவீத இந்தியர்கள் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதை சமாளிக்கவும் அவர்கள் தற்போது கற்றுக்கொண்டு வருகின்றனர்” என ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X