என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும் - தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள்
Byமாலை மலர்18 July 2020 10:05 PM GMT (Updated: 18 July 2020 10:05 PM GMT)
கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் தங்கள் பிளாஸ்மா அணுக்களை தானம் செய்ய முன்வர வேண்டும் என தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐதராபாத்:
கொரோனா வைரசின் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், பிளாஸ்மா சிகிச்சை முறை கொரோனா தடுப்புக்கு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.
வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருக்கும். அவரது நோய் எதிர்ப்பு அணுக்களை அடையாளம் கண்டு, அவற்றை பிரித்தெடுத்து கொரோனா நோயாளிகளுக்கு கொடுத்து சிகிச்சை அளிப்பதே பிளாஸ்மா சிகிச்சை ஆகும்.
இதற்காக வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்த பலர் தங்கள் பிளாஸ்மா அணுக்களை சிகிச்சைக்காக தானமாக வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் இஎஸ்ஐசி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்மா சிகிச்சை மையத்தை அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேற்று ஆய்வு செய்தார்.
அதன் பின் பேசிய ஆளுநர் தமிழிசை, ’கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களில் உரிய தகுதியுடையவர்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும். மாநிலத்தில் பிளாஸ்மா தட்டுப்பாட்டால் வைரஸ் பாதிக்கப்பட்ட யாரும் உயிரிழக்கக்கூடாது என்ற நிலையை உருவாக்க மக்கள் பிளாஸ்மா தானம் செய்ய முன்வர வேண்டும்’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X