என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை - சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்
Byமாலை மலர்9 July 2020 11:07 AM GMT (Updated: 9 July 2020 11:07 AM GMT)
இந்தியாவில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
டெல்லியில் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷர்தன் தலைமையில் நாட்டில் கொரானா பரவலை கட்டுப்படுத்துவது, மருத்துவ கட்டமைப்பு வசதிகள் குறித்து விவாதிப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், ஹர்தீப் சிங் பூரி மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்த்தன், நாட்டில் கொரோனா சமூக பரவலாக மாறவில்லை என நிபுணர்கள் தெரிவித்ததாக கூறினார். ஒரு சில பகுதிகளில் தொற்று அதிகமாக உள்ள நிலையில், சமூக தொற்றாக மாறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
கொரோனா பரவலில் இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளதாக செய்திகள் வெளியாகும் நிலையில், மக்கள் தொகையில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளதையும் புரிந்து கொள்ள வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார். உலகில் பத்து லட்சம் பேருக்கு ஆயிரத்து 453 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் 538 ஆக உள்ளதாகவும் மத்திய அமைச்சர் ஹர்சவர்த்தன் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X