search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தங்க கட்டிகள்
    X
    தங்க கட்டிகள்

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கம் பறிமுதல்

    திருவனந்தபுரம் விமான நிலையத்தில் 30 கிலோ தங்கத்தை பறிமுதல் செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனால் சுங்கத்துறை அதிகாரிகள் அதிக விழிப்புடன் கண்காணித்து வருகிறார்கள்.

    இந்நிலையில் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த சரக்கு விமானத்தில் தூதரக பேக்கேஜ் என்று ஒரு பை இருந்துள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக அந்த பேக்கை எடுத்துக் கொள்ள யாரும் வரவில்லை.

    இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு அந்த பார்சல் மீது சந்தேகம் வர பிரித்து பார்த்துள்ளனர். அப்போது 30 கிலோவுக்கும் அதிகமான எடையுள்ள தங்க கட்டிகள் இருப்பது கண்டனர். தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×