search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்
    X
    டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்

    கொரோனா பாதிப்பு- டெல்லி சுகாதாரத்துறை மந்திரிக்கு பிளாஸ்மா சிகிச்சை

    கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை மந்திரிக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது.
    புதுடெல்லி:

    டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு  கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டதையடுத்து, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    கொரோனா அறிகுறிகள் தென்பட்டதால் அவருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் நாளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகடிவ் என வந்தது. இரண்டாவது நாளில் (ஜூன் 17) நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் நுரையீரல் தொற்று இருந்தது தெரியவந்ததால் அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில், கொரோனா தொற்றுக்கான சிறப்பு சிகிச்சையாக பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்படுகிறது. இன்று காலை அவருக்கு காய்ச்சல் எதுவும் இல்லை என்றும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து அவரது உடல்நிலை கண்காணிக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறி உள்ளனர்.
    Next Story
    ×