என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா- டெல்லி சுகாதாரத்துறை மணீஷ் சிசோடியா வசம் ஒப்படைப்பு
Byமாலை மலர்18 Jun 2020 3:47 AM GMT (Updated: 18 Jun 2020 3:47 AM GMT)
டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அவரது பொறுப்புகள் துணை முதல்வரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி:
டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உனடியாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் நாளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகடிவ் என வந்தது. பின்னர் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சத்யேந்திர ஜெயின் வகித்து வந்த சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிற துறைகளும், துணை முதல்வரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு நேற்று முன்தினம் கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர் உனடியாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்ததால் அவருக்கு உடனடியாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. முதல் நாளில் நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு நெகடிவ் என வந்தது. பின்னர் நேற்று நடத்தப்பட்ட சோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சத்யேந்திர ஜெயின் வகித்து வந்த சுகாதாரத்துறை பொறுப்பு, துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவுக்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது. சத்யேந்திர ஜெயினுக்கு ஒதுக்கப்பட்டிருந்த பிற துறைகளும், துணை முதல்வரிடம் கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டிருப்பதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X