search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்
    X
    டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின்

    டெல்லி சுகாதாரத்துறை மந்திரி மருத்துவமனையில் அனுமதி- கொரோனா பரிசோதனை

    டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு இன்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    டெல்லி சுகாதாரத்துறை மந்திரி சத்யேந்திர ஜெயினுக்கு இன்று கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் மூச்சு விடுவதிலும் சிரமம் இருந்தது. இதனையடுத்து அவர் உனடியாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் இருப்பதால் உடனடியாக கொரோனா பரிசோதனையும் செய்யப்பட உள்ளது.

    இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்பு, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு கொரோனா இல்லை என பரிசோதனையில் தெரியவந்தது.

    டெல்லியில் இதுவரை 42829 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 1400 பேர் உயிரிழந்துள்ளனர். 16427 பேர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×