என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாநிலங்களவை தேர்தல்: தேவேகவுடா உள்பட 4 பேரின் மனுக்கள் ஏற்பு
Byமாலை மலர்11 Jun 2020 3:30 AM GMT (Updated: 11 Jun 2020 3:30 AM GMT)
மாநிலங்களவை தேர்தலையொட்டி தேவேகவுடா உள்பட 4 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டன. சுயேச்சை வேட்பாளரின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
பெங்களூரு :
மாநிலங்களவையில் கர்நாடகத்தை சேர்ந்த 4 எம்.பி.க்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாள் ஆகும். இதில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜனதா சார்பில் அசோக் கஸ்தி, ஈரண்ண கடாடி, ஜனதா தளம்(எஸ்) சார்பில் தேவேகவுடா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மேலும் சங்கமேஸ் நரகுந்து என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக சட்டசபை செயலாளரான தேர்தல் அதிகாரி விசாலாட்சி, நேற்று வேட்புமனுக்களை பரிசீலனை செய்தார்.
இதில் சுயேச்சை வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தார். மற்ற 4 பேர் அதாவது மல்லிகார்ஜுன கார்கே, தேவேகவுடா, அசோக் கஸ்தி, ஈரண்ண கடாடி ஆகிய 4 பேரின் மனுக்களை ஏற்றுக் கொண்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
மனுக்களை வாபஸ் பெற நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். யாரும் மனுக்களை வாபஸ் பெறாவிட்டால், தற்போது களத்தில் உள்ள 4 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. நாளையே அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
மாநிலங்களவையில் கர்நாடகத்தை சேர்ந்த 4 எம்.பி.க்களின் பதவி காலம் இந்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்த நிலையில் மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்ய நேற்று முன்தினம் கடைசி நாள் ஆகும். இதில் காங்கிரஸ் சார்பில் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜனதா சார்பில் அசோக் கஸ்தி, ஈரண்ண கடாடி, ஜனதா தளம்(எஸ்) சார்பில் தேவேகவுடா ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். மேலும் சங்கமேஸ் நரகுந்து என்பவர் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார்.
கர்நாடக சட்டசபை செயலாளரான தேர்தல் அதிகாரி விசாலாட்சி, நேற்று வேட்புமனுக்களை பரிசீலனை செய்தார்.
இதில் சுயேச்சை வேட்பாளரின் மனுவை தள்ளுபடி செய்தார். மற்ற 4 பேர் அதாவது மல்லிகார்ஜுன கார்கே, தேவேகவுடா, அசோக் கஸ்தி, ஈரண்ண கடாடி ஆகிய 4 பேரின் மனுக்களை ஏற்றுக் கொண்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
மனுக்களை வாபஸ் பெற நாளை (வெள்ளிக்கிழமை) கடைசி நாள் ஆகும். யாரும் மனுக்களை வாபஸ் பெறாவிட்டால், தற்போது களத்தில் உள்ள 4 பேரும் போட்டியின்றி மாநிலங்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்படுவது உறுதியாகிவிட்டது. நாளையே அதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X