என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் நல்ல நிலை -மத்திய மந்திரி ஹர்ஷவர்தன்
Byமாலை மலர்10 Jun 2020 7:37 AM GMT (Updated: 10 Jun 2020 7:37 AM GMT)
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில், பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியா நல்ல நிலையில் உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் குழுவின் 16வது கூட்டம், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமையில் நடைபெற்றது.
கொரோனாவால் தங்களுக்கு ஏற்படும் ஆபத்து தொடர்பான மதிப்பீட்டிற்கும், வைரசுக்கு எதிரான பாதுகாப்பிற்கும் உதவும் ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் நினைவுபடுத்தினார். நாடு முழுவதும் இதுவரை 12.55 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. 2 மாதங்களுக்கும் மேலாக மூடப்பட்டிருந்த வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தடுப்பு பணிகள் தொடர்பாக மத்திய மந்திரிகள் குழுவின் 16வது கூட்டம், சுகாதாரத்துறை மந்திரி ஹர்ஷவர்தன் தலைமையில் நடைபெற்றது.
அப்போது பேசிய மந்திரி ஹர்ஷவர்தன், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் மற்றும் வைரசை கட்டுப்படுத்துவதில் பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியா நல்ல நிலையில் உள்ளது என்றும், ஆனால் அதில் மன நிறைவு அடைய முடியாது என்றும் கூறினார்.
தனி மனித இடைவெளி, முக கவசம், கைகளை சுத்தம் செய்வது உள்ளிட்ட கட்டுப்பாடுகளே கொரோனாவை தடுக்கும் சமூக ஆயுதம் என ஹர்ஷவர்தன் குறிப்பிட்டார்.
கொரோனாவால் தங்களுக்கு ஏற்படும் ஆபத்து தொடர்பான மதிப்பீட்டிற்கும், வைரசுக்கு எதிரான பாதுகாப்பிற்கும் உதவும் ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என்றும் அவர் நினைவுபடுத்தினார். நாடு முழுவதும் இதுவரை 12.55 கோடிக்கும் அதிகமானோர் இந்த செயலியை பதிவிறக்கம் செய்திருப்பதாகவும் அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X