search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நோய் அறிகுறி தொடர்பாக சோதனை நடத்தும் சுகாதார ஊழியர்கள்
    X
    நோய் அறிகுறி தொடர்பாக சோதனை நடத்தும் சுகாதார ஊழியர்கள்

    நேற்று மட்டும் 9887 பேர்- இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.36 லட்சத்தை தாண்டியது

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2.36 லட்சத்தை கடந்துள்ள நிலையில், 1.14 லட்சம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஜூன் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தல் உள்ளிட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரமாக நடைபெறுகின்றன.

    பொருளாதார நடவடிக்கைகளுக்காக ஊரடங்கு கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவதாலும், பரிசோதனைகளை அதிகரிப்பதாலும் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்கிறது. அதேசமயம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருவது ஆறுதல் அளிப்பதாக உள்ளது.

    கொரோனா சோதனை

    இந்நிலையில், இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் மொத்தம் 236657 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 9887 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 294 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்மூலம் கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6642 ஆக உயர்ந்துள்ளது.

    இதுவரை 114073 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 4611 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளில் 115942 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

    மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 80 ஆயிரத்தை தாண்டியது. மொத்தம் 80229 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 28694 பேருக்கும், டெல்லியில் 26334 பேருக்கும், குஜராத்தில் 19094 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×