என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெடிகுண்டுகளுடன் வந்த காரை சிதறடித்த பாதுகாப்பு படை- மற்றொரு புல்வாமா சம்பவம் தவிர்ப்பு
Byமாலை மலர்28 May 2020 6:34 AM GMT (Updated: 28 May 2020 6:34 AM GMT)
ஜம்மு காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் வெடிகுண்டுகளுடன் வந்த காரை பாதுகாப்பு படையினர் மடக்கிப் பிடித்து வெடிக்கச் செய்ததால் மிகப்பெரிய அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டு வருகிறது.
2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் வந்த வாகனங்கள் மீது, பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தினான். இதில், 40 வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்து நாசவேலைக்கு சதித் திட்டம் தீட்டி வரும் பயங்கரவாதிகளை ஒழிக்க பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். இந்த தேடுதல் வேட்டையின்போது பயங்கரவாதிகள் கொல்லப்பட்டு அவர்களின் சதி திட்டம் முறியடிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், புல்வாமா மாவட்டத்தில் மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் நோக்கத்துடன், காரில் வெடிகுண்டுகளை ஏற்றி வருவதாக நேற்று இரவு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் சோதனைச் சாவடியில் அந்த காரை மடக்கினர். ஆனால் கார் நிற்காமல் சென்றது. இதனால் பாதுகாப்பு படையினர் காரை நோக்கி சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதனையடுத்து காரை நிறுத்திவிட்டு, டிரைவர் தப்பி ஓடிவிட்டான். பின்னர் காரை பாதுகாப்பு படையினர் கைப்பற்றினர். அதில் சுமார் 30 கிலோ எடையுள்ள வெடிகுண்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் வசித்த மக்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் வெடிகுணடு நிபுணர்கள் மூலம் அந்த காருடன் வெடிகுண்டுகள் வெடிக்கச் செய்யப்பட்டன. வெடிகுண்டுகளுடன் வந்த காரை உரிய நேரத்தில் மடக்கிப் பிடித்ததால், மற்றொரு புல்வாமா தாக்குதல் தவிர்க்கப்பட்டுள்ளது.#WATCH J&K: In-situ explosion of the vehicle, which was carrying IED, by Police in Pulwama.
— ANI (@ANI) May 28, 2020
Major incident of vehicle-borne IED explosion was averted by Police, CRPF & Army after Pulwama Police got credible info last night that a terrorist was moving with an explosive-laden car pic.twitter.com/UnUHSYB07C
2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் புல்வாமாவில் சிஆர்பிஎப் வீரர்கள் வந்த வாகனங்கள் மீது, பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய காரை மோதவிட்டு தாக்குதல் நடத்தினான். இதில், 40 வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X