என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேற்கு வங்காளத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை: பார்த்தா சாட்டர்ஜி அறிவிப்பு
Byமாலை மலர்28 May 2020 3:35 AM GMT (Updated: 28 May 2020 3:37 AM GMT)
மேற்கு வங்காளத்தில் ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி கூறியுள்ளார்.
கொல்கத்தா :
மேற்கு வங்காளத்தில் ஜூன் 10-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி நேற்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
உம்பன் புயல் தாக்குதலால் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.700 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்கள் இடிந்துள்ளன. வேறு பள்ளிக்கூடங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தனிமை முகாம்களாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் மூடியே இருக்கும்.
12-ம் வகுப்பு தேர்வுகள், திட்டமிட்டபடி ஜூன் 29, ஜூலை 2, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேற்கு வங்காளத்தில் ஜூன் 10-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் திறப்பு இல்லை என்று அம்மாநில கல்வித்துறை மந்திரி பார்த்தா சாட்டர்ஜி நேற்று கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது:-
உம்பன் புயல் தாக்குதலால் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.700 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. 8 மாவட்டங்களில் பள்ளி கட்டிடங்கள் இடிந்துள்ளன. வேறு பள்ளிக்கூடங்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தனிமை முகாம்களாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. எனவே, ஜூன் 30-ந் தேதிவரை பள்ளிகள் மூடியே இருக்கும்.
12-ம் வகுப்பு தேர்வுகள், திட்டமிட்டபடி ஜூன் 29, ஜூலை 2, 6 ஆகிய தேதிகளில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X