search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா அறிகுறி தொடர்பாக பரிசோதனை நடத்தும் ஊழியர்கள்
    X
    கொரோனா அறிகுறி தொடர்பாக பரிசோதனை நடத்தும் ஊழியர்கள்

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு 50 ஆயிரத்தை தாண்டியது

    மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், 1635 பேர் உயிரிழந்துள்ளனர்.
    மும்பை:

    இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,38,845 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6977 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 154 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4021 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 57,721 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.

    நாடு முழுவதும் பரவலாக கொரோனா தாக்கம் இருந்தாலும், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலம் நோய்த்தொற்றில் தொடர்ந்து உச்சத்தில் உள்ளது.

    மகாராஷ்டிராவில் கடந்த 24 மணி நேரத்தில் 3041 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு 50231 ஆக உயர்ந்துளள்து. கடந்த 24 மணி நேரத்தில் 58 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 1635 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் 16277 பேருக்கும், குஜராத்தில் 14056 பேருக்கும், டெல்லியில் 13418 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×