என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தினசரி 95 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை - மத்திய மந்திரி ஹர்சவர்தன் தகவல்
Byமாலை மலர்10 May 2020 6:59 AM GMT (Updated: 10 May 2020 6:59 AM GMT)
இந்தியாவில் தினசரி 95 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்கிற அளவுக்கு திறன் அதிகரித்துள்ளது என மத்திய மந்திரி ஹர்சவர்தன் கூறினார்.
புதுடெல்லி:
வட கிழக்கு மாநிலங்களில் கொரோனா வைரஸ் தாக்கம் எப்படி இருக்கிறது, தடுப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகள் எப்படி இருக்கின்றன என்பதை உயர்மட்ட கூட்டம் நடத்தி டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி ஹர்சவர்தன் நேற்று ஆய்வு செய்தார்.
அவர் கொரோனா வைரசுக்கு எதிரான போரில், அசாம், அருணாசலபிரதேசம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, திரிபுரா மற்றும் சிக்கிம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களின் பங்களிப்பை பாராட்டினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது:-
வட கிழக்கு மாநிலங்களில் பெரும்பாலானவற்றில் பச்சை மண்டலங்களை பார்க்கிறபோது அது மிகப்பெரிய ஆறுதலாகவும், ஊக்கம் தருவதாகவும் அமைந்துள்ளது. அசாமிலும், திரிபுராவிலும்தான் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுகின்றனர். பிற மாநிலங்கள் பச்சை மண்டலத்தில் உள்ளன. ஆரஞ்சு மண்டலங்களை நாம் பச்சை மண்டலங்களாக மாற்றுவதில் கவனம் செலுத்த வேண்டும்.
நமது நாட்டில் கொரோனா வைரஸ் பரிசோதனை வசதியானது, தினசரி 95 ஆயிரம் பேருக்கு செய்யத்தக்க அளவில் உயர்ந்துள்ளது. 332 அரசு மற்றும் 121 தனியார் ஆய்வுக்கூடங்கள் இதை மேற்கொள்கின்றன. இதுவரை கொரோனா வைரஸ் பரிசோதனை 15 லட்சத்து 25 ஆயிரத்து 631 பேருக்கு நடத்தப்பட்டுள்ளது.
வட கிழக்கு மாநிலங்களில் தற்போதைய சாதகமான நிலையை தக்க வைத்துக்கொள்வதற்கு, இடம் பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், வெளிநாட்டில் இருந்து திரும்புவோர் விதிமுறைகளின்படி தனிமைப்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்கு பொது இடங்களில் எச்சில் துப்புவதையும், புகையிலை மெல்லுவதையும் தடுக்க உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாநிலங்களை அவர் கேட்டுக்கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X